சட்டவிரோத உண்டியல் கொடுக்கல், வாங்கல் வர்த்தகத்தில் ஈடுபட்ட வர்த்தகர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரைக் கடத்தி 21 லட்ச ரூபா கப்பம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் குறித்த புலனாய்வு உயரதிகாரி கைது செய்யப்பட்டார்.
குறித்த உயர் புலனாய்வு அதிகாரியுடன் சில உத்தியோத்தர்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய வர்த்தகர் ஒருவரிடமிருந்து 60 லட்ச ரூபா கப்பம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தகரை கைது செய்து அவரை விடுதலை செய்வதற்காக இந்தப் பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. குறித்த வர்த்தகர் மாளிகாவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.