 நேற்று முன்தினம் கிளிநொச்சியில் சிவநேசன் எம்.பியின் பூதவுடலுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அஞ்சலி செலுத்திய சமயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதி னான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு பிரசன்னமாயிருந்தனர் என்று தெரியவருகிறது.
எம்.பிக்களான கஜேந்திரன், கனகரத்தி னம், பத்மினி சிதம்பரநாதன், மாவை சேனா திராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன், சிவசக்தி ஆனந்தன், சிவநாதன் கிஷோர், பத்மநாதன், சந்திரநேரு சந்திரகாந்தன், கனகசபை, ராஸின் முஹமட் இமாம் ஆகியோரே அங்கு தமது சக நாடாளுமன்ற உறுப்பினரான சிவநேசனின் பூதவுடலுக்கு நெருக்கமாகப் பிரசன்னமா யிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
தலைவர் பிரபாகரனுடன் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பா. நடேசன், உள வுப்பிரிவுப் பொறுப்பாளர் பொட்டம்மான், நிதிப் பொறுப்பாளர் பா. தமிழேந்தி ஆகி யோரும் கூட வந்து அஞ்சலி செலுத்தினர்.
|