கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாது என்று எண்ணி ஆயுதக்குழுக்களுடன் இணைந்து அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது. இந்நிலையில், மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
மன்னார் தட்சணாமருதமடுப் பகுதியில் சிறிலங்கா இராணூவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் நான்கு அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள தமிழ் மாவட்டங்களில் கடந்த இருபது வருடங்களில், யாழ். மாவட்டத்தில் தான் மொத்த குடிப்பரப்பில் முப்பது சதவீதமான வீழ்ச்சி காணப்படுவதாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா படையினரின் ஆழஊடுருவும் அணியினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இரு வேறுபகுதிகளில் பொருத்திய கிளைமோர் வெடித்ததில் எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
நாகர்கோயில் மற்றும் முகமாலைப் பகு திகளில் நேற்றிரவு அகோர ஷெல் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் இடம்பெற்றன.மாலை தொடக்கம் இங்கிருந்து அங் கும் அங்கிருந்து இங்குமாக அடிக்கடி ஷெல்தாக்குதல்கள் நடைபெற்றன.
இரவு சுமார் 10 மணிக்குப் பின்னர், நள்ளிரவுக் குப் பின்னர் இச் செய்தி எழுதப்படும் வரை ஒரே தொடர்ச்சியாக அகோரமாக ஷெல் தாக்குதல் நடைபெறும் சத்தங்கள் கேட்டன.தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளிலிருந்து ஷெல்கள் சீறிப்பாய்ந் தன. அங்கிருந்து புலிகள் ஏவிய ஷெல்கள் தென்மராட்சிப் பகுதியில் வந்து வீழ்ந்து வெடித்தன எனத் தகவல்கள் தெரிவித்தன.
தென்மராட்சி , வடமராட்சியிலிருந்து பீரங்கி மற்றும் ஷெல்கள் ஏவப்பட்ட சத் தங்கள் குடாநாட்டின் பல பகுதிகளிலும் நேற்றிரவு தொடர்ந்து கேட்டவண்ணம் இருந்தன. இதேவேளை நாகர் கோயில்முகமாலைப் பகுதிகளில் நேற்றுப் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை அரசுப் படை களும் விடுதலைப் புலிகளும் கடும் பீரங்கி,ஷெல் தாக்குதல்களைப் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.ஷெல்கள் பல தென்ம ராட்சியில் படைநிலைப் பிரதேசங்களில் வந்து வீழ்ந்தன என அறிய வந்தது. தென்மராட்சியின் தென்முனையில், இதனால் பெரும் பதற்றம் நிலவியது.