முன்பக்கம்  |  எம்மைப் பற்றி  |  விளம்பரங்கள் |  வெப் பீட்  |  தொடர்புக்கு  |  தமிழ்வின்னை எனது தொடக்கப் பக்கமாக்குக  

   2   சிவநேசனின் பூதவுடலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அஞ்சலி செலுத்தியபோது 14 எம்.பிக்கள் அருகில் இருந்தனர்
   2   தென்மராட்சியில் நண்பகலும் இரவும் அகோர ஷெல், பீரங்கி தாக்குதல்கள்!
   2   இலங்கையில் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை நிறுவ வலியுறுத்து சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழுவும் வலியுறுத்துகிறது

 
  • செய்திகள்
  •  
  • கட்டுரைகள்
  •  
  • World
  •  
  • Entertainment
  • முக்கிய செய்திகள்
    Tamilwin.com வன்னிப் பகுதியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் ஈகைச் சுடரேற்றி மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.
    [மேலும்]

    Tamilwin.com இலங்கை தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.சிவநேசன் முற்பகல் கிளேமோர் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
    [மேலும்]

    Tamilwin.com கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாது என்று எண்ணி ஆயுதக்குழுக்களுடன் இணைந்து அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது. இந்நிலையில், மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
    [மேலும்]

    Tamilwin.com மன்னார் தட்சணாமருதமடுப் பகுதியில் சிறிலங்கா இராணூவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் நான்கு அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
    [மேலும்]

    Tamilwin.com இலங்கையில் உள்ள தமிழ் மாவட்டங்களில் கடந்த இருபது வருடங்களில், யாழ். மாவட்டத்தில் தான் மொத்த குடிப்பரப்பில் முப்பது சதவீதமான வீழ்ச்சி காணப்படுவதாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
    [மேலும்]

    Tamilwin.com சிறீலங்கா படையினரின் ஆழஊடுருவும் அணியினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இரு வேறுபகுதிகளில் பொருத்திய கிளைமோர் வெடித்ததில் எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
    [மேலும்]

     
    இணையசெய்திகள்
    தமிழ்ஓசை
    புதினம
    லங்காஸ்ரீ
    நிதர்சனம
    சங்கதி
    பதிவு
    தமிழ்நாதம
    ஈழம் நியூஸ்
     
    தமிழ் சஞ்சிகைகள்
    வீரகேசரி
    தினக்குரல்
    உதயன்
    மட்டக்களப்பு ஈழநாதம்
    நமது ஈழநாடு
    விகடன்
    அம்பலம்
    சுடர் ஒளி
    ஈழமுரச
    குமுதம்
    தினகரன்
    தினத்தந்தி
    விடுதலை
    தினபூமி
    தினமணி
    மாலைச்சுடர்
    தினமலர்
    மாலைமலர்
    எரிமலை
    நக்கீரன்
     
    வீடியோ செய்திகள்
    லங்காஸ்ரீ TV
     
    ஆடியோ செய்திகள்
    ஐ.பி.சி தமிழ்
    பி.பி.சி தமிழோச
    புலிகளின் குரல்
    உலகத்தமிழ்செய்தி
     
    English News
    10 Language News
    Goodsrilanka.com
    Tamilnet
    LTTE Peace Secretariat
    Reuters
    Tamilcanadian
    msnbc
    yahoo
    BBC
    google
    CNN
    Tamilguardian
    Worldnews
     
     
    சிறிலங்காப் படையினரின் வளத்தை சீரழிப்பதே விடுதலைப் புலிகளின் பிரதான உத்தி

    [Monday March 10 2008 12:35:47 PM GMT] [யாழினி]
     
    Tamilwin.com சிறிலங்காவின் தென்பகுதியில் இடம்பெற்று வரும் தாக்குதல்கள் படையினரின் வளத்தையும், பொருளாதரத்தையும் சீரழித்து வருகின்றது. இதுவே தமிழீழ விடுதலைப் புலிகள் தென்பகுதியில் தாக்குதல்களை அதிகரிப்பதன் பிரதான நோக்கம் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது.

    இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப்பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:

    விடுதலைப் புலிகள் நேற்று சனிக்கிழமை கல்கே பகுதிக்கு அண்மையில் உள்ள கதிர்காமம் - புத்தள வீதியில் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் இராணுவத் தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. உழவூர்தியில் மூன்று இராணுவத்தினரும், மூன்று கொமோண்டோக்களும் பயணம் செய்த போது இத்தாக்குதல் இடம்பெற்றது.

    கிளைமோர்த் தாக்குதலைத் தொடர்ந்து படையினர் மீது துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். இதன் போது 200 சுற்று ரவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உழவூர்தியின் இயந்திரத்தின் சக்கர பாதுகாப்பு கவசத்தில் அமர்ந்திருந்த இராணுவ சார்ஜனே இத்தாக்குதலில் உயிரிழந்தவர் ஆவார்.

    தற்போது அப்பகுதிகளில் கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் ஆழமான சிறிலங்காவின் தென்பகுதியினை சீர்குலைக்க முடியும் என்பதனை விடுதலைப் புலிகள் மீண்டும் நிரூபித்திருக்கின்றனர்.

    கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் நாள் புத்தளப் பகுதியில் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டதுடன் 63 பேர் காயமடைந்திருந்தனர். அதன் பின்னர் அப்பகுதியில் இடம்பெற்ற இரு வேறு தாக்குதல்களில் மேலும் 15 பேர் கொல்லப்பட்டிருந்தனர். தற்போது அப்பகுதியில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    நேற்று இடம்பெற்ற தாக்குதல் அப்பகுதி கிராம மக்களிடம் அச்சத்தையும், பீதியையும் அதிகரித்துள்ளது. விடுதலைப் புலிகளை அப்பகுதியில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளில் படையினர் தோல்வி கண்டுள்ளதையே நேற்றைய தாக்குதல் எடுத்துக்காட்டியுள்ளது.

    முன்னைய தேடுதல்கள் தோல்வியில் முடிவடைந்தது அப்பகுதியின் படையினரின் பலம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதனை காட்டுகின்றது. இது அதிகம் செலவுகளை எற்படுத்தலாம். இதுவே விடுதலைப் புலிகள் தென்பகுதியின் தாக்குதல்களை அதிகரிப்பதன் பிரதான நோக்கம்.

    வேறு பகுதிகளில் நடைபெறும் இதே போன்ற தாக்குதல்களும் அதிக படையினரை உள்வாங்கலாம். இது படையினருக்கு மிகவும் சவாலான விடயம்.

    ஆழமான சிறிலங்காவின் தென்பகுதியை விட கொழும்பையும் தாக்கும் திட்டங்களை விடுதலைப் புலிகள் முதன்மைப்படுத்தி வருகின்றனர். எனினும் வன்னிக் களமுனை தற்போது முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் நாள் படையினர் மடுவை நோக்கிய தாக்குதலை ஆரம்பித்திருந்தனர். அது தற்போதும் தொடர்கின்றது. ஆனால் மடுவையும், விடத்தல்தீவையும் கைப்பற்றும் தமது இலக்குகளை படையினர் இன்றுவரை அடையவில்லை.

    இரு வாரங்களில் மடுவைக் கைப்பற்றி விடுவதாக படையினர் கடந்த மாதங்களில் தெரிவித்திருந்தனர். எனினும் அவர்களின் காலக்கெடுக்கள் கடந்து விட்டன.

    இந்நிலையில் இந்த படை நடவடிக்கைகளை வழிநடத்தி வரும் இரு உயர் இராணுவ அதிகாரிகளான வவுனியா மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய மற்றும் 57 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெகத் டயஸ் ஆகியோர் கடந்த புதன்கிழமை கொழும்புக்குச் சென்று பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் அது தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளனர்.

    மன்னார் மற்றும் மணலாறு களமுனைகளில் இடம்பெற்று வரும் மோதல்களை விட முகமாலையிலும் படையினர் அடிக்கடி மோதல்களில் ஈடுபட்டு வரகின்றனர். எனினும் அப்பகுதிகளில் நடைபெறும் படை நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியிடப்படுவதில்லை.

    இதனிடையே கடந்த மாதம் 104 படையினர் கொல்லப்பட்டதாகவும் 822 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தின் போது அமைச்சர் நிமல் சிறீபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

    இக்காலப்பகுதியில் 80 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் 201 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

    எனினும் காணாமல் போன படையினர் தொடர்பாக அவர் எதனையும் தெரிவிக்கவில்லை. ஆனால் அவர்களையும் சேர்த்தால் எண்ணிக்கை எவ்வளவு? என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
     
         
    முதற்பக்கம   நண்பருக்கு அனுப்ப   கருத்துக்கள   பிரதி எடுக்க
     
    மேலும் 10 செய்திகள்

      சிவநேசனின் பூதவுடலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அஞ்சலி செலுத்தியபோது 14 எம்.பிக்கள் அருகில் இருந்தனர்
      தென்மராட்சியில் நண்பகலும் இரவும் அகோர ஷெல், பீரங்கி தாக்குதல்கள்!
      இலங்கையில் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை நிறுவ வலியுறுத்து சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழுவும் வலியுறுத்துகிறது
      மட்டக்களப்பில் இன்று உள்ளூராட்சித் தேர்தல்; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு பதற்றம், பீதிக்கு மத்தியில் நடைபெறுகிறது
      மன்னார் முன் அரங்கில் ஓராண்டாகப் படைகள் ஒரு சில சதுரக் கிலோ மீற்றருக்குள் முடக்கம்! முன்னேற முடியாத விரக்தியில் தளபதிகள் தவிப்பு என்கிறார் நடேசன்
      போலியான பீரங்கிகளினால் ஏமாறும் சிறிலங்கா வான் படையினர்
      கொழும்பு வெள்ளவத்தையில் குண்டுவெடிப்பு - ஒருவர் பலி, 4 பேர் காயம்
      101 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான மட்டு. உள்ளூராட்சி சபை வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
      ஐ.நா.வுடன் இணைந்து செயற்பட தயார் சர்வதேச கண்காணிப்பை ஏற்க முடியாது - அரசாங்கம் ஜெனிவாவில் உறுதிபட தெரிவிப்பு
      மனித உரிமைகளை ஆராய இலங்கையில் ஐ.நா. அலுவலகம் அவசியமில்லை -விமல் வீரவன்ச
     
     
    இன்றைய செய்திகள்
    2010-09-06
    கடந்த 7 நாட்கள்
    2010-09-05
    2010-09-04
    2010-09-03
    2010-09-02
    2010-09-01
    2010-08-31
    2010-08-30
    தேடுதல்

     

    srilanka news