 இலங்கையில் உள்ள தமிழ் மாவட்டங்களில் கடந்த இருபது வருடங்களில், யாழ். மாவட்டத்தில் தான் மொத்த குடிப்பரப்பில் முப்பது சதவீதமான வீழ்ச்சி காணப்படுவதாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
1981 இல் யாழ். மாவட்டத்தில் எடுக்கப்பட்ட குடிசன மதிப்பீட்டில் மக்கள் தொகை 7,39,798 ஆக இருந்ததாகவும் 2001 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மக்கள் குடிப்பரம்பல் 4,90,621 ஆகக் குறைந்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளார்.
பல்வேறு அரசியல் நெருக்கடிகளாலும் யுத்தச் சூழ்நிலைகளாலும் இம் மாவட்ட மக்களில் பெரும் எண்ணிக்கையான மக்கள் புலம்பெயர்ந்து வாழ்வதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
சுமார் 5 இலட்சம் தமிழர்கள் வெளிநாடு களில் வாழ்கின்றனர். இவர்களில் பெரும் எண்ணிக்கையினர், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
குறிப்பாக கனடாவில் 2,50,000 பேரும் ஐக்கிய அமெரிக்காவில் 85,000 பேரும் பிரான்ஸில் 50,000 பேரும், ஜேர்மனியல் 45,000 பேரும் சுவிட்ஸர்சலாந்தில் 25,000 பேரும் அவுஸ்திரேலியாவில் 25,000 பேரும், நியூசிலாந்து, இந்தியா டென்மார்க், போன்ற ஏனைய நாடுகளில் 10,000 பேரும் வாழ்வதே குடிப்பரம்பல் குறைவுக்கு காரணமாகுமெனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
|