கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாது என்று எண்ணி ஆயுதக்குழுக்களுடன் இணைந்து அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது. இந்நிலையில், மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
மன்னார் தட்சணாமருதமடுப் பகுதியில் சிறிலங்கா இராணூவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் நான்கு அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள தமிழ் மாவட்டங்களில் கடந்த இருபது வருடங்களில், யாழ். மாவட்டத்தில் தான் மொத்த குடிப்பரப்பில் முப்பது சதவீதமான வீழ்ச்சி காணப்படுவதாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா படையினரின் ஆழஊடுருவும் அணியினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இரு வேறுபகுதிகளில் பொருத்திய கிளைமோர் வெடித்ததில் எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
வன்னியில் ஆள ஊடுரும் அணியினரின் தாக்குதலில் 8 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்
[Wednesday February 27 2008 08:47:59 PM GMT]
[யாழ் வாணன்]
சிறீலங்கா படையினரின் ஆழஊடுருவும் அணியினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இரு வேறுபகுதிகளில் பொருத்திய கிளைமோர் வெடித்ததில் எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
முதலாவது கிளைமோர் தாக்குதல் புதன்கிழமை மதியம் 1.50மணியளவில் வவுனியா வடக்கு பகுதியில் ஏ-9 வீதியில் பனங்காமம் மூன்று முறிப்பு கிராம அலுவலகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உழவியந்திரத்தில் பயணம் செய்த பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது 4 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இரண்டாவது தாக்குதல் இரவு 8.30 மணியளவில் மருதோடை ஒலுமடுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போதும் உழவியந்திரத்தில் பயணித்த பொதுமக்களே கொல்லப்பட்டுள்ளனர்.
முதலாவது தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் பிரதீபன், சண்முகலிங்கம் தவராசா, செல்வரத்தினம் செந்தூரன், மற்றும் குணபாலசிங்கம் ஜெகந்திரையன் என இனம்காணப்பட்டுள்ளது.
இரண்டாவது தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் விமலதாஸ், கந்தசாமி, மரியன், மற்றும் விஜயகுமார் என இனம்காணப்பட்டுள்ளது.