அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீதான தாக்குதலில் உயிரிழந்த புலிகளின் உடல்களை நிர்வாணமாக்கி கொண்டு சென்றமை கண்டிக்கத்தக்கது என்று இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது.
இது குறித்து இடதுசாரி முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அநுராதபுரம் விமானப்படைத்தள தாக்குதலில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உடல்களை நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்டமையை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இன்றைய நாகரிக உலகில் இத்தகைய ஈனச்செயலை மனித கௌரவத்தை மதிக்கும் எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மேலும் தாம் ஏன் அப்படிகொண்டு சென்றனர் என்பதற்கு பாதுகாப்பு பிரிவினர் கூறும் சமாதானம் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இவர்களின் இத்தகைய கீழ்தரமான செய்கையை அநுராதபுரம் ஆயரே கண்டித்துள்ளõர்.
1988 1989 காலப்பகுதியில் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே.வி.பி.யினரை கொன்ற இராணுவத்தினர் அவர்களின் உடல்களை வீதியில் உருக்குலைந்த நிலையில் போட்டிருந்தனர். இவ் உடல்களை நாய்களும் ஏனையவையும் கடித்து குதறியது வரலாறு ஆகும். ஆனால் அன்று நாம் இந்த காட்டு மிராண்டித்தன செயற்பாட்டை வன்மையாக கண்டித்ததுடன் அதற்கு எதிராக பல போராட்டங்களையும் நடத்தியிருந்தோம். இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் அந்த போராட்டங்களில் எம்முடன் இணைந்திருந்தார். ஆனால் இன்று அவரின் ஆட்சியில் விடுதலைப்போராளிகளின் உடல்கள் நிர்வாணமாக்கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இன்றைய அரசு போரை தொடர்ந்தும் முன்னெடுப்பதால் நாட்டு மக்கள் உணவுக்காக ஏங்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்று திரண்டு போராட முன்வர வேண்டும்.
Sri Lanka Army and Police parading the dead bodies of the Black Tigers to the Sinhala public in Anuradhapura [Courtesy: Lankadissent.com]
SLA, Police, parading the dead bodies of the Black Tiger commandos [Photo circulated by email]
Naked bodies of Black Tigers displayed for Sinhala public by the Sri Lanka military, photo circulated by email. [Blacked out by TamilNet]
Naked dead bodies of Black Tigers, paraded by Sri Lankan military in Anuradhapura [Courtesy: Lankadissent.com]