ஐ.நா.வின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான பேச்சாளருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி அனுப்பியுள்ள மின்னஞ்சல் முறைப்பாடு:
அனுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது ஒக்ரோபர் 22 ஆம் நாள் கரும்புலிகள் தாக்குதல் நடத்திய பின்னர் மோதல் நடைபெற்ற பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் 20 சடலங்களை அடையாளம் கண்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்தது.
உயரிய மரபுகளைப் பின்பற்றி வரும் தமிழீழ விடுதலைப் புலிகள், எமது போராளிகளின் உடல்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்தோம். நாங்கள் போராளிகளின் உடல்களுக்காக காத்திருந்த போது சிறங்கா இராணுவத்தின் செயற்பாடு எம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தாக்குதலில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளின் உடல்களை நிர்வாணப்படுத்தி அதனை பொதுமக்களின் பார்வைக்கு சிறிலங்கா இராணுவம் வைத்துள்ளது. அந்தப் படங்களை இந்த மின்னஞ்சலுடன் இணைத்துள்ளோம். இது போரில் உயிரிழந்தோர் தொடர்பிலான ஜெனீவா மாநாட்டின் முடிவுகளுக்கு எதிரானது என்பதனை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நாம் உறுதியாக கருதுகிறோம்.
போரில் உயிரிழந்தோருக்கு பல்வேறு சமூகத்தினரும் உயரிய மதிப்பளித்து வருகின்றனர்.
போரில் உயிரிழந்தோர் தொடர்பிலான ஜெனீவா மாநாட்டின் முடிவு சரத்து 130ஐ நாம் சுட்டிக்காட்டுகிறோம்.
உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலி போராளிகளினது உடல்களை சிறிலங்கா இராணுவமானது நிர்வாணப்படுத்தியமையானது அவர்களை நேசித்த குடும்பத்தினரை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
எமது இயக்க வரலாறு முழுமைக்குமே சிறிலங்கா இராணுவ போர்க் கைதிகளையும் உயிரிழந்த சிறிலங்கா இராணுவத்தினரையும் நாம் கௌரவத்துடனே நடத்தி மரியாதை செலுத்தியிருக்கிறோம் என்பதனையும் தங்களுக்குச் சுட்டிக்காட்டுகிறோம் என்று அந்த மின்னஞ்சலில் செல்வி குறிப்பிட்டுள்ளார்.
Sri Lanka Army and Police parading the dead bodies of the Black Tigers to the Sinhala public in Anuradhapura [Courtesy: Lankadissent.com]
SLA, Police, parading the dead bodies of the Black Tiger commandos [Photo circulated by email]
Naked bodies of Black Tigers displayed for Sinhala public by the Sri Lanka military, photo circulated by email. [Blacked out by TamilNet]
Naked dead bodies of Black Tigers, paraded by Sri Lankan military in Anuradhapura [Courtesy: Lankadissent.com]